#நான்_அம்பேத்கர்_பேசுகிறேன்....
என் சிலையின் தலையை உடைக்க காரணம் - என் சிலைக்கும் உயிர் இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.!
என் சிலையின் பீடத்தைக்கூட தகர்க்க
காரணம்-அந்த பீடத்துக்கு பிற உயிர்களையும் உயிர்ப்பிக்கும் சக்தி
இருப்பதாய் அவர்கள் நினைக்கிறாா்கள்.!
என் சிலையை நீ உடை
உனக்கு உடைக்கும் உரிமையினையும்
வாங்கி தந்தது நான் தான்..!
நீ வெளியே வரும் சட்டமும்
என்னாலேயே எழுதப்பட்டது..!!
நீ மண் என்றது மனு
மனிதன் எனச் சட்டம் செய்தவன் நான்.!
நீ காலில் பிறந்தவன் என்று மனு
நீ சாதிக்கப்பிறந்தவன் என்றவன் நான்.!
கல்லும் மண்ணும் கடப்பாரையும் தாங்கிய கைகள் "பேனா" பிடிக்கட்டும்
என்றவன் நான்..!
மீண்டும்,
கல்லும் கடப்பாரையும் பிடிக்க நினைப்பவன்
இடிக்கதுடிப்பது என்னைத்தானே
இருக்கும்...?
சாதியே சட்டமாக இருந்த காலத்தில்
நீதியை சட்டமாக்கியவன் நான்.!
அந்த சதி புரியாக்கூட்டம்
இடிக்கத் துடிப்பது
என்னைதானே இருக்கும்..?
எல்லோா்க்கும் சுதந்திரம் கேட்டேன்
எதிர்போா் என்னை அடியுங்கள்;
எல்லோருக்கும் சமத்துவம் விரும்பினேன்
நிகாரிப்போா் என்னை அடியுங்கள்;
எல்லோரும் சகோதரா் என்றேன்
விரும்பாதவர் என்னை அடியுங்கள்.....
உங்களுக்காகவே பேசினேன்
உங்களுக்காகவே எழுதினேன்
உங்களுக்காகவே செயல்பட்டேன்
அடிபடத் தகுதியானவன் நான் தான்..!
நீங்கள் அடிப்படாமல் காப்பாற்றிய நான்
அடிபடத்தான் வேண்டும்.
இந்த அடி எனக்கு வலிக்கும் என்று
மட்டும் நினைக்காதீர்கள்....
நான் மனுசாஸ்திரங்களை கேள்வி
கேட்டவன்..?
நான் அவதாரங்களை கேள்வி
கேட்டவன்..?
நான் கடவுள்களை கேள்வி
கேட்டவன்..?
நான் வேள்வித் தீயைக் கேள்வி
கேட்டவன்..?
எனவே,
நீ வெட்டிய அருவாளின் முனை
மழுங்கி இருப்பதை
உற்றுப்பாருங்கள்.
இந்த அடியால் என்னை அவமானப்படுத்தி விட்டதாக மட்டும்
நினைக்காதீர்கள்.....
மாட்டுவண்டியில் உருட்டிவிடப்பட்டு
நாடாளுமன்றத்தில் போய் விழுந்தவன் நான்;
நான் பட்டங்களை வாங்கியவனல்ல
பல்கலைகழகத்தினையே வாங்கியவன்;
நான் கட்சி தலைவனல்ல
பல்லாயிரம் கட்சிகளை உருவாக்கிய
தலைவர்களின் தலைவன்;
சாதித்தலைவன் அல்ல
சமூகத்தலைவன்;
எனது லட்சிய சமூகத்தில் நீங்கள் எல்லாம்
உத்தமர்களாக வாழ்வீர்கள் என்று நினைத்தேன்,
இன்னுமா நீங்கள்
சாதித்சகதியில் புரள்கிறீர்கள்..?
எனது சிலை உடைக்கப்பட்டது பற்றியே
எல்லோரும் பேசுகிறாா்கள்
அது சிலமணி நேரத்தில் முளைத்தது
எதனால் என்று யோசியுங்கள்..?
தொட்டது ஆட்டின் தலை அல்ல
சிங்கத்தின் தலை என்பதால்
சிலிர்த்தெழுந்தது....
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற
வள்ளுவன் மண்ணில்...
வாடியபயிரைக் கண்டு வாடிய
வள்ளலாளர் மண்ணில்...
சாதிமத பேதமற்ற திராவிடர்கள் என்றழைத்த அயோத்தியாா் மண்ணில்...
பூர்வீகக்குடிகளுக்காக போராடிய
பெரியாா் மண்ணில்...
நீ சாதி பாா்த்து கொல்கிறாய்,
நீ சாதி பாா்த்து அடித்து உதைக்கிறாய்,
நீ சாதி பாா்த்து சதியாட்டம் ஆடுகிறாய்,
என்றால்,;
உனது ஊரில் சிலையாக இருப்பதற்கே
அவமானப்படுகிறேன்...!!!
No comments:
Post a Comment